For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுக்கடலில் ஸ்டவ் வெடித்து மீனவர் படுகாயம்

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக் கடலில் ஸ்டவ் வெடித்ததில் மீனவர் படுகாயமடைந்தார்.

தூத்துக்குடி மாதவன் நாயர் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் சொந்தமாக நாட்டு படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். காலை இவருடன் அதே பகுதியை சேர்ந்த வினிங்ஸ்டன், செந்தில், முத்து, பில்காம்பிள்ளை ஆகியோர் மீன்பிடித்து விட்டு மாலையில் கரை திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது படகில் வைத்து மாரியப்பன் ஏர் ஸ்டவ் அடுப்பில் டீ போட்டுக் கொண்டிருந்தார். திடீரென ஸ்டவ் வெடித்ததால் மாரியப்பன் உடல் கருகினார்.

அவரை உடனடியாக கரைக்கு கொண்டு வந்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X