தேர்தல் விதி மீறல் - தேவே கெளடா கார் மீண்டும் பறிமுதல்
ஹசன்: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் இரண்டு கார்களை தேர்தல் அதிகாரிகள் 2வது முறையாக பறிமுதல் செய்தனர்.
கடந்த 28ம் தேதி மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூட் என்ற இடத்தில் தேர்தல் அதிகாரிகளின் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தியதாக கூறி கெளடாவின் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ஒரு முன்னாள் பிரதமருக்கு சுதந்திரமாக நடமாடக் கூட உரிமை இல்ைலயா என்று பொறுமியிருந்தார் கௌடா.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டு கார்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னராயப்பட்டனாவுக்கு நேற்று கௌடா வந்தார். ஹசன் மாவட்டத்தின் சில பகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக இரு கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், இந்தக் கார்களைப் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி இரு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
கௌடாவின் கார்களை தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து பறிமுதல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications