ஐபிஎல்லின் ஆடம்பர விளையாட்டு - பாஜக விமர்சனம்
டெல்லி: ரோமானியர் காலத்து கிளாடியேட்டர் விளையாட்டைப் போல ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ராஜ்யசபாவில் நிதி மசோதா மீதான விவாதத்தின்போது பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் பேசுகையில், இந்தப் போட்டித் தொடருக்காக ரூ. 4500 கோடி செலவிடப்படுகிறது. இதை நாட்டில் தற்போது நிலவும் சிமென்ட் பற்றாக்குறையைத் தீர்க்க ஒரு சிமென்ட் ஆலை அமைக்க பயன்படுத்தியிருக்கலாம்.
ரோமானியர் காலத்தில் நடந்த கிளாடியேட்டர் போட்டியைப் போல தெரிகிறது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்.
இது கிரிக்கெட் அல்ல. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான பிளவை அதிகரிக்கும் மாபெரும் தவறை ஐபிஎல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு பணத்தையும் கொண்டு ஆடம்பரமாக ஒரு போட்டியை நடத்துவதற்கு மக்களுக்குப் பயன்படும் வகையில் அதை செலவிட வேண்டும் என்றார் ஜஸ்வந்த் சிங்.