பெரம்பலூர்-கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil

சென்னை-திருச்சி இடையே 4 வழி நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர்-தொழுதூர் இடையே ராமநத்தம் என்ற இடத்தில் வெள்ளாறு ஆற்றின் குறுக்கே பெரிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இன்று இந்தப் பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பிற்பகலில் பாலத்தின் ஒரு பகுதியில் கான்க்ரீட் கட்டுமானம் இடிந்து விழுந்தது. இதில் சைட் என்ஜினியர் உள்பட 11 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புப் படையினர் 9 பேரை படுகாயத்துடன் மீட்டனர்.
2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் யாராவது சிக்கியுள்ளனரா என்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.
முன்னதாக இந்த சம்பவத்தில் 24 பேர் பலியாகிவிட்டதாக யுஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications