நளினியின் விடுதலை கோரும் மனு: பிரியங்காவுக்கு தொடர்பில்லை-காங்
சென்னை: விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனுவுக்கும், அவரை பிரியங்கா சந்தித்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரை வேலூர் சிறைக்கு வந்து பிரியங்கா சந்தித்து விட்டுச் சென்ற பின்னர் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரியங்கா சந்திப்புக்கும், நளினியின் மனுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், பிரியங்காவின் சந்திப்புக்கும், நளினியின் மனுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரியங்கா, நளினியை சந்தித்ததால் எந்தவித சட்டச் சிக்கலும் இல்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications