ரூ.5 கோடி ஹெராயின் பறிமுதல்- தாய்லாந்து பெண் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மலேசியாவிற்கு கடத்தப்படவிருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தாய்லாந்து நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். தாய்லாந்தைச் சேர்ந்த புன்சா கன்பச்சரூட் (25) என்ற பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரது சூட்கேசை சோதனை செய்தபோது 4 பொட்டலங்களில் ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 4.9 கிலோ எடை கொண்ட அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5 ஐந்து கோடியாகும். விசாரணையில், டெல்லியில் இருந்து தாய்லாந்துக்கு இந்த போதை பொருள் கடத்த இருந்தது தெரிய வந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பறிமுதல் செய்வது இதுவே முதல் முறை என்று என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன் மலேசியாவுக்கு ஹெராயின் கடத்த முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ராச்சல் பேக்விங் (38) என்ற பெண் பிடிபட்டார். அவரிடம் இருந்து 2 கிலோ 700 கிராம் எடை கொண்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறி்ப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications