ஏரி- கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள், 2 பெண்கள் பலி

Subscribe to Oneindia Tamil

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை பகுதியில் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்களும், கிணற்றில் விழுந்து 2 பெண்களும் இறந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நவ்ரோஜி தெருவைச் சேர்ந்த நாகராஜின் மகன் தன்ராஜ் (7). இவர்களது உறவினர் மகன் ஹரீஷ் (6). இருவரும் அருகில் உள்ள பட்டாளம்மன் ஏரியில் குளிக்கச் சென்றனர்.

இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தனர்.

கிணற்றில் மூழ்கி பெண்கள் பலி:

அதே போல தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தர்மவதிம்மனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதவரெட்டி மனைவி சசிகலா (32). அதே பகுதியைச் சேர்ந்த நாகப்பா என்பவரது மனைவி சுஜாதா (35). இருவரும் விவசாய கிணற்றில் துணி துவைக்கச் சென்றனர். துணி அலசும்போது சசிகலா தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

அவரை காப்பாற்ற முயன்ற சுஜாதாவும் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இரண்டு சம்பவங்கள் குறித்தும் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+