ரூ.200 லஞ்சம்-மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை
தூத்துக்குடி: மின் இணைப்பு கொடுக்க ரூ.200 லஞ்சம் வாங்கிய மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நிதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்தவர் இருதயராஜ். தன்னுடைய புது வீட்டுக்கு மின் இணைப்பு பெற நண்பர் அழகுமுருகன் மூலம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது புதிதாக மின் இணைப்பு தர புதூர் பாண்டியபுரத்தை சேர்ந்த மின் ஊழியர் சேசையா ரூ.200 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி ஊழல் தடுப்பு கண்காணிப்பாளர் பிரிவு போலீசில் அழகு முருகன் புகார் செய்தார். இதையடுத்து அழகு முருகனிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்கிய சேசையாவை மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுகுறித்து வழக்கு விசாரணை துத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மேரி அன்சலாம், சேசையாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications