பழமுதிர்சோலையில் விநாயகர் சிலை மாயம்
மதுரை: மதுரை அழகர்கோவிலில் உள்ள பழமுதிர்சோலை கோவிலில் விநாயகர் சிலை திருடு போயுள்ளது.
மதுரை அடுத்த அழகர்மலை மீது அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள நாகலிங்கம் மரத்தடியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 அடி உயர விநாயகர் சிலை இருந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த விநாயகரை வணங்கிய பிறகே மூலவரை தரிசிக்க செல்வது வழக்கம்.
கோயில் வளாகத்தில் இருந்த இந்த விநாயகர் சிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போனது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலை 6 மணிக்கு பிறகு மலைக்கு செல்லும் பாதையின் கேட் மூடப்படும். இரவில் 2 பேர் காவலுக்கு இருக்கின்றனர். சிலை திருட்டில் மர்மம் இருப்பதாக பக்தர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
புதிதாக கட்டப்படும் கோவில்களில் பழைய விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வது சிலருக்கு நம்பிக்கை. அதற்காக யாராவது திருடியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications