செக் மோசடி-ஸ்ரீதேவிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: ரூ.10 கோடி செக் மோசடி வழக்கில் நடிகை ஸ்ரீதேவிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
திரைப்படம் தயாரிப்பதற்காக ரூ.10 கோடிக்கு 3 செக்குகளை கொடுத்து நடிகை ஸ்ரீதேவி கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த செக்குகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா பைனான்சியர்கள் மது குப்தா, சுசில் குப்தா ஆகியோர் குர்லா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் குர்லா நீதிமன்றம் ஸ்ரீதேவிக்கு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் தனது கணவர் போனி கபூர், வியாபார விஷயமாக கையெழுத்திடாத சில செக்குகளை அந்த பைனான்சியர்களிடம் கொடுத்திருந்தார். அவற்றில் என்னை போலவே போலியாக கையெழுத்து போட்டு பைனான்சியர்கள் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஜுஹூ போலீசில் ஸ்ரீதேவி புகார் செய்தார்.
இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்திலும் ஸ்ரீதேவி வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து குர்லா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி மீதான வழக்கு விசாரணைக்கு கடந்த மார்ச் 26ம் தேதியன்று மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மேலும், ஸ்ரீதேவி கொடுத்த புகாரை 3 மாதங்களில் விசாரித்து முடிக்குமாறு ஜுஹூ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பைனான்சியர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு ஸ்ரீதேவிக்கும், மஹாராஷ்டிர அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
எப்படி என் ராஜதந்திரம்.. ஈரான் அதிபருக்கு போனைப் போட்ட மோடி! களத்தில் இறங்கிய இந்திய கடற்படை! சுபம்! -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications