பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்-தமிழகம் திட்டம்

நேற்று சட்டசபையில், தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் கருணாநிதிக்குப் பதிலாக மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கல்வி ஒரு பாரமல்ல என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்களுக்குப் பதில் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.
முதலில் இரு பள்ளிகளில் இது பரீட்சார்த்தமாக அமல்படுத்தப்படும். பின்னர் இது விரிவுபடுத்தப்படும்.
எதிர்காலத்தில் மல்டிமீடியா மூலம் பாடங்கள் நடத்தப்படும். இதன் மூலம் புத்தகச் சுமையை சுமக்கும் நிலைமை மாறும்.
மேலும், அனிமேஷன் மற்றும் மல்டிமீடியாவைப் பயன்படுத்தி போதிக்கும் சாப்ட்வேர் விரைவில் அரசால் அறிமுகப்படுத்தப்படும்.
வெளிநாட்டு மொழிகளில் சிறப்புடன் திகழும் ஐடி மாணவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளைக் கற்க எல்காட் உதவியுடன் சாப்ட்வேர்கள் உருவாக்கப்படும்.
இந்த வெற்றியைப் பொறுத்து பிற மொழிகளைக் கற்கும் வகையிலும் சாப்ட்வேர்கள் உருவாக்கப்படும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications