நக்சலைட் மருதுவுக்கு ஆபரேஷன்-டாக்டர்கள் அறிவுரை
மதுரை: முருகமலையில் பிடிபட்ட நக்சலைட் லெனின் மருதுவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
முருகமலை பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் நக்சலைட் தலைவன் மகாலிங்கம், லெனின் மருது, முருகானந்தம் ஆகியோர் படுகாயத்துடன் பிடிபட்டனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் லெனின் மருதுவுக்கு வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்ததால் நீண்டநாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.
ஒரளவு குணம் அடைந்த நிலையில் லெனின் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு திடீரென கைப்பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.