விமான நிலையத்தில் மோதல்-'பவர் கட்'!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலைய போலீஸாருக்கு விமான நிலைய மேலாளர் சுப்பையா இரவு 8 மணியளவில் தொலைபேசி மூலம் ஒரு தகவல் கொடுத்தார். விமான நிலையத்தில் இருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில், ஸ்பானர் சகிதம் உள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகமாக உள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஜெய்கணேஷ், செல்வம் என்ற அவர்கள் இருவரும், முக்கியப் பிரமுகர்கள் அறையில் ஏசி ரிப்பேர் என்று கூறியதால் பழுது பார்க்க வந்ததாகவும் கூறினர். மின்சாரப் பிரிவு கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர்தான் தங்களை அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், எங்களது வேலையை முடித்து விட்டுக் கிளம்பும்போது மேலாளர் சுப்பையா வந்து எனது வீட்டில் ஏசி பழுதாகியிருப்பதாகவும், வந்து சரி பார்த்து விட்டுச் செல்லுமாறும் கூறி அழைத்தார். அதற்கு நாங்களாக வர முடியாது. எங்கள் நிறுவனத்திற்குக் கூறினால் அவர்கள் சொன்னால்தான் நாங்கள் வர முடியும் என்று கூறினோம்.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா எங்கள் மீது தீவிரவாதிகள் முத்திரை குத்திப் பழிவாங்க பார்க்கிறார் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் அங்கு வந்த விஜயபாஸ்கருக்கும், சுப்பையாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மின்சாரப் பிரிவு ஊழியர்கள் அங்கு வந்து தகராறில் இறங்கினர். மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பும் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
உடனடியாக விமான நிலைய ஆணைய அதிகாரி மணிராம் வந்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். சுப்பையா மீது தவறு இருப்பது தெரிய வந்ததால் அவர் உடனடியாக நிர்வாகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மின்சாரப் பிரிவு ஊழியர்கள் மின்சாரத்தைத் துண்டித்ததால் கிட்டத்தட்ட கால் மணி நேரம் விமான நிலையத்தில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரும் பதட்டமடைந்தனர்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications