குழந்தை சாவு-கணவருக்கு பயந்து நாடகமாடிய தாய்!
விருதுநகர்: காணாமல்போன குழந்தையை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் செய்தார். விசாரணையில் குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், மதுக்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி மாரியம்மாள். கர்ப்பமாக இருந்த மாரியம்மாள் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்த 2 நாளில் காணாமல் போய்விட்டதாக தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் மாரியம்மாள் கூறி அழுதுள்ளார்.
காணாமல் போன தனது குழந்தையை மீட்டுத் தருமாறு மல்லி போலீசில் ராஜ்குமார் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் மாரியம்மாளிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குழந்தை பிறந்த இரண்டு நாளில் மர்மமான முறையில் இறந்துள்ளது.
ஆனால், இது கணவருக்கு தெரிந்தால் பிரச்னையாகும் என்பதால் குழந்தையை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டு, காணாமல் போய்விட்டதாக கணவனிடம் மாரியம்மாள் நாடகமாடியது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications