'பஸ் லேட்': எம்.எல்.ஏக்கள் டென்ஷன்!
சென்னை: சட்டசபைக் கூட்டம் முடிந்த பின்னரும் பஸ் வராததால், டென்ஷன் ஆன எம்.எல்.ஏக்கள் தகராறில் இறங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர்ந்து நடந்து வருகிறது. சட்டசபைக்கு வருமம் எம்.எல்.ஏக்களின் வசதிக்காக, குறிப்பாக வெளியூர் எம்.எல்.ஏக்களின் வசதிக்காக பேருந்து வசதியை அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தினசரி காலையில் எம்.எல்.ஏக்களை அழைத்து வரும் இந்தப் பேருந்துகள் மதியம் கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏக்களை அழைத்துச் சென்று விடுதியில் விடுவது வழக்கம்.
நேற்று மதியம் கூட்டம் முடிந்ததும் பசியோடு எம்.எல்.ஏக்கள் வெளியே வந்தனர். ஆனால் அங்கு பஸ்கள் எதையும் காணவில்லை. அந்த சமயத்தில் அங்கு நின்றிருந்த ஒரு பேருந்து, முதல்வரின் காரை எடுப்பதற்கு வசதியாக வேறு பாதையில் சென்று திரும்பி வர போயிருந்தது.
இதை அறியாத எம்.எல்.ஏக்கள் டென்ஷனில் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் இறங்கினர். சிறிது நேரம் கழித்து பஸ் வந்து சேர்ந்தது. இதையடுத்து எம்.எல்.ஏக்கள் பஸ்சில் ஏறி விடுதிக்குப் பறந்தனர்.












Click it and Unblock the Notifications