புதுவையிலும் மாணவிகள் முதலிடம்: தேர்ச்சி விகிதம் 4% சரிவு
புதுச்சேரி: புதுச்சேரியிலும் இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அங்கு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் குறைந்துள்ளது. வழக்கம் போல மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.
புதுவை கல்வி அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மொத்தம் 10,922 பேர் பிளஸ்டூ தேர்வை எழுதினர். இதில் 9,369 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 76.63 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட சுமார் 4 சதவீதம் குறைவாகும்.
வழக்கம்போல இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பெட்டைட் செமினரி உயர்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவர்தன் 1,183 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த இப்ராஹிம் ஆசிப்-1,178, பாலாஜி-1,174 மதிப்பெண்கள் எடுத்து 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
டான் பாஸ்கோ மற்றும் செயின்ட் பாட்ரிக் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் 1,174 மதிப்பெண்கள் எடுத்து பாலாஜியுடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
நகர்ப் பகுதியில் 100 சதவீதமும், கிராமப்புறங்களில் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். 11 தனியார் பள்ளிகளும், 11 அரசு பள்ளிகளும் இந்த பரிசை தட்டிச் செல்கின்றன என்றார்.












Click it and Unblock the Notifications