புலிகள் தாக்குதலில் இலங்கை கடற்படை கப்பல் மூழ்கடிப்பு-கிழக்கு மாகாணங்களில் இன்று தேர்தல்

Subscribe to Oneindia Tamil

LTTE Boats
கொழும்பு: திரிகோணமலை அருகே இலங்கை கடற்படையின் கப்பலை புலிகள் தாக்கி மூழ்கடித்தனர். கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

அந்த சரக்கு கப்பலை நேற்றிரவு 2.15 மணியளவில் புலிகள் தாக்கினர். அவர்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் கப்பல் உடைந்து மூழ்கியது.

அதில் ராணுவத்தினருக்கு ஆயுதங்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் கப்பலில் 'சரக்கு' ஏதும் இல்லை. அது காலியாக சென்ற கப்பல் என கடற்படை கூறுகிறது.

கப்பலின் அடியில் சென்று தங்களது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து புலிகள் அதை மூழ்கடித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தேர்தல்:

இதற்கிடையே திரிகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய கிழக்கு மாகாணங்களில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த மாகாணங்களில் ஜனநாயகரீதியில் அரசை நிறுவ இந்தத் தேர்தலை நடத்துவதாக இலங்கை அறிவித்துள்ளது.

இதை புலிகள் ஆதரவு கட்சிகள் புறக்கணித்துவிட்டன.

அதிபர் ராஜபக்ஷேவின் கட்சியுடன் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா தரப்பு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+