எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ மாணவர்களுக்கான வழிகாட்டி முகாம்
சென்னை: யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பில் 10 மற்றும் 12 ம்வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான மேற்படிப்பு வழிகாட்டி முகாம் சென்னையில் நடந்தது.
யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பில் தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று (10.05.2008) சென்னை, திருவல்லிக்கேணி ஆதம் மாக்கெட், அஹமது அலி பார்பியா மெட்ரிக்குலேசன் பள்ளியில் வழிகாட்டி முகாமும் "நாமும் சாதிக்கலாம்" என்ற புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெற்றன.
இதில் டாக்டர் ஜீலானி, டிரஸ்ட்டி-ஜான் டிரஸ்ட், டாக்டர் ஆயிஷா ஹமீத், மேனேஜி்ங் டிரஸ்ட்டி-ஹிதாயா வெல்ஃபேர் டிரஸ்ட், நஷீமா பேகம், முதல்வர்-அஹமது அலி பார்பியா மெட்ரிக் பள்ளி
பேராசிரியர் ஹமீது ஹீசைன்-முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, முஹம்மத்- சீனியர் நெட்வொர்க் இன்ஜினியர், ஜியாவுதீன் ஆகியோர் உட்பட பல கல்வியாளர்கள் மாணவ மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.












Click it and Unblock the Notifications