சிவகங்கை 'ஸ்பைஸ் பூங்கா'-இலவச நிலம் தர பரிந்துரை
சிவகங்கை: சிவகங்கையில் துவங்கப்படவுள்ள ஸ்பைஸ் தொழில் பூங்காவுக்கு 72.70 ஏக்கர் நிலத்தை ஸ்பைஸ் வாரியத்துக்கு இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சிவகங்கையில் தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசின் ஸ்பைஸ் வாரியம் முடிவு செய்துள்ளது.
பூங்காவில் மிளகு, ஏலக்காய், தேயிலை, காப்பி, கிராம்பு, போன்ற சமையலுக்கு மனம் சேர்க்கும் வாசனை திரவியங்கள் சார்ந்த ஆலைகள், மற்றும் பல முக்கிய வணிக மையங்கள் துவங்கப்படவுள்ளன.
இந்த பூங்கா அமைக்கத் தேவையான இடத்தை ஸ்பைஸ் வாரிய உயர்அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சிவகங்கை - மதுரை சாலையில் 72.70 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தனர்.
தொழில் பூங்கா விரைவில் அமைய உள்ளதால் தமிழக அரசு அந்த இடத்தை உடனே ஒதுக்கித்தரவேண்டும் என்று ஸ்பைசல் வாரியம் கேட்டுக் கொண்டது.
இந்த இடத்துக்கு தமிழக அரசு ரூ 49 லட்சம் விலை மதிப்பிட்டது. ஆனால் இடத்தை இலவசமாக வழங்க வேண்டும் என ஸ்பைசஸ் வாரியம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
இதே திட்டத்துக்காக ஆந்திராவில் அம்மாநில அரசு 124 ஏக்கர் நிலத்தை ஸ்பைஸ் வாரியத்துக்கு இலவசமாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதன் அடிப்படையில் இந்த நிலத்தை தமிழக அரசு ஸ்பைஸ்வாரியத்துக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications