மே 30க்கு பிறகு மின்வெட்டு இருக்காது - ஆற்காடு வீராசாமி

திருச்சியில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது காற்றாலைகள் மூலம் 1000 முதல் 1800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் மே 15ம் தேதிக்கு பிறகுதான் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கும். இந்தாண்டு ஏப்ரல் 27ம் தேதி முதலே மின் உற்பத்தி தொடங்கிவிட்டது.
இதனால் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற தேவையில்லை. தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு நாள் விடுப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
மின் உற்பத்தியில் தற்போதுள்ள இதே நிலை நீடிக்குமானால் தொழிற்சாலைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த சுழற்சி முறையிலான விடுப்புத் திட்டம் விரைவில் ரத்து செய்யப்படும். கடந்த 2 மாதங்களாக தமிழக அரசுக்கு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் சிறப்பான ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர்.
அதேபோல தொழிற்சாலைகளுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த யூனிட் ஒன்றுக்கு 10 பைசா சலுகையும், பர்னஸ் ஆயிலுக்கான வாட் வரியும் மே 15ம் தேதிக்கு பிறகு ரத்து செய்யப்படும்.
காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கிவிட்டதால் மே 30க்கு பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது. தமிழக மின்வாரியத்துக்கு இந்தாண்டு ரூ.4,700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், குடிசைகள் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் ஏற்படும் இழப்பான ரூ.1510 கோடியை தமிழக அரசு மின்வாரியத்துக்கு மானியமாக வழங்கி விடுகிறது.
இழப்பீடு தொகையை சரிசெய்யும் வகையில் மத்திய அரசுக்கு சொந்தமான பவர் டிரேடிங் கார்பொரேஷன் நிறுவனத்துக்கு யூனிட் ஒன்று ரூ.7 விலையில் மின்சாரத்தை விற்பனை செய்ய உள்ளோம். இதன் மூலம் ரூ.2000 கோடி வருவாய் கிடைக்கும். இதை கொண்டு மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை சரி செய்யலாம்.
பல பகுதிகளில் முன் தடை ஏற்படுவதற்கு காரணம் மின் மாற்றிகள், ஃபீடர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிந்தது. இதை நிவர்த்தி செய்ய ரூ.2000 கோடி செலவாகும். இவ்வாறு வீராசாமி கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications