வகுப்புகலவரம்: குண்டர் சட்ட மசோதா தாக்கல்

இந்த மசோதாவை சட்ட மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தெய்வீக சிலைகள் மற்றும் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, விகாரப்படுத்துவது இழிவு படுத்துவது போன்ற செயல்கள் மூலம் சிலர் ஊறு விளைவிக்கின்றனர் என்று அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பொது அமைதியை பெருமளவில் பாதிக்கும் வகையில் கலகம் செய்ய சிலர் தூண்டுகிறார்கள்.
மதம், இனம், ஜாதி அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே அடிக்கடி பகைமை உணர்ச்சியை வளர்த்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களால் பொது அமைதி பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதற்காக 1982ம் ஆண்டு கள்ள சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சார தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், குடிசை நில ஆக்ரமிப்பாளர்கள், வீடியோ திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுத்தல் சட்டம் என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
இந்த சட்டத்தில் உள்ள குண்டர்கள் என்ற வாசகத்தின் பொருள் வரையறைக்குள் மத,இன, ஜாதி பகைமையைத் தூண்டும் நபர்களை கொண்டு வந்து தடுப்பு காவலில் வைப்பதற்கு வகை செய்யப்படுகிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications