நூல் விலை உயர்வு-கரூரில் நாளை கடையடைப்பு
கரூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஜவுளி கூட்டமைப்பு சார்பில் கரூரில் நாளை கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சங்க தலைவர் குமார் கூறியதாவது: இந்த ஆண்டு பருத்தி உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆனால் சீரான விலையில் நூல் கிடைப்பதில்லை. சீரான விலையில் நூல் கிடைக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். நூற்பாலைகளில் சிட்டா நூல் உற்பத்தியை அரசு கண்காணிக்க வேண்டும். கழிவு பருத்தி ஏற்றுமதியால் மோட்டா ரக நூல் உற்பத்தி தடைபடுவதோடு வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியும் குறைகின்றது.
கரூர், திருப்பூர், ஈரோடு, குமாரபாளையம், சேலம் ஆகிய பகுதிகளில் இயங்கும் சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கடலில் கலக்க அரசு வழி செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜவுளி கூட்டமைப்பு சார்பில் கரூரில் நாளை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்டும் என்றார்.












Click it and Unblock the Notifications