தடுப்பூசி: தமிழகத்தில் மீண்டும் ஒரு குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
மணப்பாறை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு மேலும் ஒரு குழந்தை பலியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வி.பூசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனி-விஜயா. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த தம்பதிக்கு 45 நாட்களுக்கு முன் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக அனியாப்பூர் சந்தைப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விஜயா நேற்று காலை கொண்டு சென்றார். அங்கு குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல புறப்பட்டனர. ஆனால் அதற்குள் குழந்தை இறந்தது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.












Click it and Unblock the Notifications