மனைவி சாவுக்கு தூண்டிய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
மதுரை: மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவருக்கும் சோழவந்தானைச் சேர்ந்த மாலதிக்கும் கடந்த 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் மாலதி கர்ப்பமடைந்தார். அப்போது கர்ப்பத்தை கலைக்கும்படி வேலுசாமி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாலதி மறுத்ததால், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வேலுசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்திக் கொள்ளும்படி மாலதி பலமுறை கூறியுள்ளார்.
ஆனால் வேலுசாமி அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த மாலதி கடந்த 26.11.98 அன்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாலதியின் தந்தை திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக வேலுசாமி மீது வழக்கு போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சித்தார்த்தன், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக வேலுசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்












Click it and Unblock the Notifications