இலங்கைக்கு வாக்கி டாக்கிகளைக் கடத்த முயன்ற 3 பேர் கைது
மதுரை: மதுரையிலிருந்து 44 வாக்கி டாக்கிகளை இலங்கைக்குக் கடத்த முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மதுரை திலகர் திடல் பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ராஜா மில் சாலையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு டாடா சுமோ கார் வேகமாக வந்தது. அந்த காரை மறித்து நிறுத்தி போலீஸார் சோதனை நடத்தினர்.
காரை நிறுத்தியதும், அதில் இருந்த 6 பேர் காரிலிருந்து இறங்கி ஓடினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் துரத்தினர். இதில், 3 பேர் பிடிபட்டனர், மற்றவர்கள் தப்பி விட்டனர்.
பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் மன்னார் பேசாலையைச் சேர்ந்த விஜி என்கிற ஜெயராஜ், யாழ்ப்பாணத்தைச் ேசர்ந்த பத்மராசா என்கிற சின்னவன் மற்றும் மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரிய வந்தது.
இவர்களில் ஜெயராஜ், திருவாதவூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர். இவர் முன்பு ஒரு கொலை வழக்கில் சிக்கியவர். அவனியாபுரம் காவல் நிலையத்திலும் இவர் மீது கொலை முயற்சி வழக்கில் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது. மேலூர் காவல் நிலையத்திலும் வழக்கு உள்ளது.
இவர்கள் பயணித்த காரில் 44 வாக்கி டாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர ரூ. 4..59 லட்சம் ரொக்கப் பணமும் சிக்கியது.
மேலும் செந்தில்குமார் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த திரவ எரிபொருளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 3 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஜல்லிக்கட்டு மட்டுமில்ல.. மதுரை கிடா சண்டையை உலகிற்கு கொண்டு வந்த மலையாள இயக்குநர்! பின்னணி நெகிழ்ச்சி -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications