10 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
மும்பை: சோமாலியா கடற்கரைப்பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
அந்த கப்பலில் இந்தியாவை சேர்ந்த 10 மாலுமிகள் இருந்ததாக இந்திய கப்பல் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோமாலியா நாட்டில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. தனியாருக்குச் சொந்தமான இந்த கப்பலின் பெயர் எம்வி விக்டோரியா.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் மும்பை துறைமுகத்தில் இருந்து சீனி உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிக்கொண்டு சோமாலியாவுக்கு கிளம்பிச் சென்றது. ஜோர்டான் நாட்டில் அந்த கப்பல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கப்பலை கண்டுபிடித்து இந்தியர்களை மீ்ட்க நடவடிக்கை எடுத்துவருவதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications