மலேசியா ஆளும் கட்சியில் இருந்து மகாதிர் விலகல்

82 வயதான மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது ஆளும் கட்சியான ஐக்கிய மலாய் தேசிய கழகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 22 ஆண்டுகளாக அந்நாட்டு பிரதமராக மகாதிர் இருந்துள்ளார். இவர்தான், படாவியை, தனது அரசியல் வாரிசாக தேர்ந்தெடுத்து அவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 8ம் தேதியன்று நடந்த பொதுத்தேர்தலில் அப்துல் படாவி தலைமையிலான ஆளும் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு முந்தைய பொதுத்தேர்தலைவிட மிகக் குறைந்த இடங்களைத்தான் அந்த கட்சி கைப்பற்ற முடிந்தது.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அப்துல் படாவி பதவி விலகவேண்டும் என்று மகாதிர் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனை ஏற்க படாவி மறுத்துவிட்டார்.
இந்நிலையில் படாவியின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சியில் இருந்து விலகுவதாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் மகாதிர் அறிவித்துள்ளார்.
ஐக்கிய மலாய் தேசியக் கழகத்தில் இருந்து இதர நிர்வாகிகளும் விலகவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனாலும், படாவியை எதிர்த்து வெளியேறுபவர்கள் எதிர்க்கட்சிக்கு சென்று விடவேண்டாம் என்றும், கட்சித் தலைமையில் மாற்றம் வரும்போது தன்னுடன் சேர்ந்து மீண்டும் கட்சியில் இணையலாம் என்றும் மகாதிர் முகமது கூறியுள்ளார்.
மகாதிரின் அதிரடி நடவடிக்கையால், படாவி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மகாதிரின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இதனால் கட்சியில் தனக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் படாவி கூறியுள்ளார். வரும் டிசம்பரில் நடக்கும் தேர்தலில் தனது பொறுப்பை நிலைநாட்டுவகையில் ஜெயித்துக் காட்டுவேன் என அவர் தெரிவித்தார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications