வன்னியர்-தலித் மோதலால் மூடப்பட்ட எறையூர் மாதா கோவில் திறப்பு

Subscribe to Oneindia Tamil

உளுந்தூர்ப்பேட்டை: தலித் மற்றும் வன்னிய கிறிஸ்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்ட விழுப்புரம் மாவட்டம் எறையூர் மாதா கோவில் நேற்று திறக்கப்பட்டது. இன்று கொடியேற்றமும், நாளை தேர் பவனியும் நடைபெறவுள்ளது.

எறையூரில் உள்ள புனித ஜெபமாலை மாதா கோவில் யாருக்குச் சொந்தம் என்பதில் கடந்த மார்ச் மாதம் மோதல் ஏற்பட்டது. தலித் மக்களை இந்த சரச்சுக்குள் அனுமதிக்க மாட்டோம் என வன்னிய கிறிஸ்தவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் நாங்களும் இந்த சர்ச்சைத்தான் பயன்படுத்துவோம் என தலித் சமுதாயத்தினர் கூறினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மார்ச் 9ம் தேதி சர்ச் மூடப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி மறை மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல சுற்றுக்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இரவு சர்ச் திறக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இன்று கொடியேற்றமும், நாளை தேர்த் திருவிழாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+