சிபிஎஸ்இ பிளஸ்டூ தேர்வு முடிவுகளிலும் மாணவிகளே ஆதிக்கம்
சென்னை: சிபிஎஸ்இ கல்வியிலான பிளஸ்டூ பொதுத்தேர்வு முடிவுகளிலும் மாணவிகள்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
சென்னை, ஆஜ்மீர், பஞ்ச்குலா பிராந்தியங்களுக்கான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
மொத்தம் 48 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் எழதிய இந்த தேர்வில் 92.84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழக மாணவர்கள் 95.69 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். மாணவிகள் 92 சதவீத தேர்ச்சி பெற்று மாணவர்களை முந்திவிட்டனர். 89 சதவீத தேர்ச்சியை மாணவர்கள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசு கல்வித்துறையின் பிளஸ்டூ பொதுத்தேர்விலும் மாணவிகளே முதலிடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்இ பிளஸ்டூ தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்றவர்களுக்கான தேர்வு வரும் ஜூலை மாதம் 18ம் தேதி நடத்தப்படும் என்று தேர்வுத்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகளை http://www.results.nic.in/, http://www.cbseresults.nic.in/ and http://www.cbse.nic.in/ ஆகிய இணையதளங்களில் அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 52001, 56735, 5431202, 51234 ஆகிய எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம்.
டெல்லி மற்றும் இதர பகுதி மாணவ, மாணவியருக்கான முடிவுகள் 23ம் தேதி வெளியிடப்படும்.
பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications