For Daily Alerts
Just In
பாட்னாவில் நாட்டின் முதல் மோனோ ரயில்-லாலு தகவல்
இதுகுறித்து லாலு கூறுகையில், நெரிசலில் தவிக்கும் பாட்னா நகரில் மோனோ ரயில் சேவையை தொடங்குவதன்மூலம் மக்கள் நிம்மதி மூச்சு விடுவார்கள். சிங்கப்பூர் மற்றும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ளதுபோல உலகத் தரம்வாய்ந்ததாக இந்த மோனோ ரயில் சேவை அமையும்.
சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இந்த ரயிலில் பயணம் செய்தபோது சுகமாக இருந்தது. இதை கட்டாயம் பாட்னாவில் செயல்படுத்தவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதற்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்.
பாட்னா- பக்தியார்பூர் இடையே சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு பல்வேறு தடங்கள் வழியாக மோனோ ரயில் பாதையை அமைப்பதற்கு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு என்ரான் நிறுவனத்திடம் ஏற்கெனவே கூறிவிட்டேன்.
இத்துடன் சேர்த்து நாட்டில் 22 இடங்களில் மோனோ ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்தும் பணி நடந்து வருகிறது என்றார்.
Comments
Story first published: Friday, May 23, 2008, 10:49 [IST]