For Daily Alerts
Just In
ராணுவ வீட்டை காலி செய்யும் முஷாரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் வரும் ஜூலை மாதம் ராவல்பிண்டியில் உள்ள தனது ராணுவ வீட்டை காலி செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.
கடும் எதிர்ப்பால் ராணுவத் தளபதி பொறுப்பில் இருந்து விலகிய முஷாரப் தொடர்ந்து அதிபர் பதவியில் ஒட்டிக் கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பில் நெருக்குதலால் முஷாரப்பின் அதிகாரங்களைப் பறிக்க புதிய அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் முஷாரப்புக்கு முன்னாள் ராணுவத் தளபதிகள் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ராணுவத் தலைவர் பதவியில் இல்லாத முஷாரப் தனது ராணுவ பங்களாவை உடனே காலி செய்ய வேண்டும் என முன்னாள் ராணுவத் தலைவர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். இதை வலியுறுத்தி அவர்கள் பேரணியும் நடத்த இருந்தனர்.
இதையடுத்து ராவல்பிண்டி பங்களாவை காலி செய்ய முஷாரப் ஒப்புக் கொண்டுள்ளார்.
Comments
Story first published: Friday, May 23, 2008, 14:01 [IST]