திருவண்ணாமலை கோபுர 'இடி' தாக்குதல்-பரிகாரம்!
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இடி தாக்கி யாழி சிலை உடைந்து விழுந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் நேற்று முன் தினம் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த இந்த மழையின்போது அருணாசலேஸ்வர் கோவிலில் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 32 அடி உயரம் கொண்ட வல்லாள மகாராஜா கோபுரத்தை இடி தாக்கியது.
இதில் கோபுரத்தில் இருந்த யாழி சிலை உடைந்தது. கோபுர கலசத்தின் அருகில் உள்ள சிற்பங்கள் பலவும் சேதமடைந்தன.
இதையடுத்து கோவிலில் 10 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்ட சிற்பங்களை சீரமைக்க ஸ்பதிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications