ரூ.3 கோடி ஹெராயின் கடத்தல்-பிலிப்பைன்ஸ் பெண் கைது
சென்னை: ரூ.3 கோடி ஹெராயினை மலேசியாவுக்கு கடத்த முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவில் கோலாலம்பூர் செல்வதற்கு மலேசிய
ன் ஏர்லைன்ஸ் விமானம் தயாராக இருந்தது. இந்த நிலையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கி்டைத்த ரகசிய தகவலையடுத்து இந்த விமானத்தில் செல்ல இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் பெரில் ரெயானோ(28) என்ற பயணியை சோதனையிட்டனர்.
அவரது கையில் இருந்த உடைமைகளும் பரிசோதிக்கப்பட்டன. இதில் சந்தேகப்படும் பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏற்கெனவே விமானத்தில் ஏற்றப்பட்ட அவரது பெரிய சூட்கேஸை மீண்டும் இறக்கி சோதனையிட்டனர்.
இதில், 3 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பவுடர் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சூட்கேஸ் விளிம்பை சுற்றியுள்ள பீடிங்கில் இந்த பவுடர் சாமர்த்தியமாக அடைக்கப்பட்டிருந்தது.
பிலிப்பைன்ஸில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பைக்கு வந்த இந்த பெண், அங்கு கிடைத்த தொடர்பை வைத்து டெல்லிக்கு சென்று ஹெராயின் பவுடரை வாங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications