Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகள்-வேலைக்காரர் கொலை: கணவர் அப்பாவி என்கிறார் மனைவி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எனது மகளையும், வேலைக்காரரையும் எனது கணவர் கொன்றிருக்க மாட்டார். அதேபோல டாக்டர் அனிதாவுடன் எனது கணவருக்கு எந்தத் தவறான உறவும் இலைல என்று அருஷியின் தாயார் நூபுர் கூறியுள்ளார்.

டெல்லி அருகே உள்ள நோய்டாவில், கடந்த 15ம் தேதியன்று அருஷி என்கிற 14 வயது சிறுமியும், அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக அருஷியின் தந்தையான டாக்டர் ராஜேஷ் தல்வார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவருக்கும், பெண் டாக்டர் அனிதா துரானி என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், இது அருஷிக்குத் தெரிய வந்ததால் அவர் ஆத்திரமடைந்ததாகவும், இதுதொடர்பாக கோபமடைந்த ராஜேஷ் தல்வார், தனது மகளையும், மகளிடம் அனிதா விவகாரம் குறித்துக் கூறிய ஹேம்ராஜையும் கொலை செய்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அதேசமயம் இன்னொரு தகவலும் நேற்று வெளியானது. ஹேம்ராஜுக்கும் (வயது 45), அருஷிக்கும் இடையே தவறான உறவு இருந்ததால் அவர்கள் இருவரையும் தல்வார் தீர்த்துக் கட்டியதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

இந்த நிலையில், தனக்கும் டாக்டர் தல்வாருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை அனிதா மறுத்துள்ளார். இவரும், டாக்டர் தல்வாரின் கிளினிக்கில்தான் பல் டாக்டராகப் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து அனிதா துரானி கூறுகையில், நானும், எனது கணவரும், தல்வார் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இரு குடும்பத்தினரும் பல வருடங்களாக நல்ல முறையில் பழகி வருகிறோம். அருஷி எங்களுக்கு மகள் போன்றவர். எங்கள் மீது இப்படி அபாண்டம் கூறப்படுவது வேதனையாக இருப்பதாக தெரிவித்தார்.

அதேபோல அருஷியின் தாயாரும், தல்வார்- அனிதா கள்ளக் காதல் செய்தியை மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், அனிதா துரானியும், அவரது கணவர் பிரபுல் துரானியும் எங்களது குடும்பத்தில் ஒரு அங்கம். எனவே அனிதாவுடன் எனது கணவரை இணைத்துப் பேசுவதை நான் நம்ப மாட்டேன். ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்.

எனது கணவர் மிகவும் நல்லவர். அருஷி மீது அவர் அதிக பாசம் வைத்திதருந்தார். எனவே அவர் அருஷியைக் கொன்றிருக்க மாட்டார். அதேபோல ஹேம்ராஜும் மிகவும் நல்லவர். அருஷியை தனது பேத்தியைப் போல பார்த்துக் கொண்டார்.

இந்தக் கொலை வழக்கிலிருந்து நான் எனது கணவரை காப்பற்றப் போராடப் போகிறேன். எனது கணவர், அருஷியைக் கொன்றதை நான் அறிவேன் என்று கூறுவதில் சற்றும் உண்மை இல்லை.

அருஷியை எனது கணவர் கொன்றபோது நான் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறுவது கற்பனையாகும். ஒரு பெண் நாள் முழுவதுமா தூங்கிக் கொண்டிருப்பார்.

எனது கணவரைக் காப்பாற்ற நான் முயற்சிக்கவில்லை. அப்படிச் செய்தால் நான் பெண்ணே இல்லை. நான் மிருகமாகி விடுவேன். எனது கணவர் தவறு செய்யவில்லை. எனது மகளை அவர் கொல்லவில்லை. இதில் உண்மை வெளியே வர வேண்டும். அதற்காகப் போராடப் போகிறேன் என்று கூறியுள்ளார் நூபுர்.

இந்தக் கொலை தொடர்பாக தல்வாரைக் கைது செய்துள்ள போலீஸார், தல்வார் குற்றத்ைத ஒத்துக் கொண்டதாக வாக்குமூலம் எதுவும் கொடுத்தாரா என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+