கருணாநிதி பிறந்த நாள்-கலைவாணர் அரங்கில் விழா

ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி பல்வேறு கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் தடபுடலாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மே 31ம் தேதி திமுக விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, ஆதிதிராவிட நலக்குழு மீனவர் அணி ஆகியவை இணைந்து கலைஞர் 85 - கொண்டாட்டம் என்ற பெயரில் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
நிகழ்ச்சி விவரம்:
மாலை 4 மணி - ராம்ஜி குழுவினரின் கலைஞர் வாழியவே' இசை நிகழ்ச்சி.
மாலை 5 மணி - டிரம்ஸ் சிவமணி வழங்கும் கலைஞர்-மங்கள இசையே.
மாலை 6 மணி - புதுச்சேரி புகழ் ஜெயமூர்த்தி குழுவினர் வழங்கும் கலைஞர்- மக்கள் இசையே நிகழ்ச்சி.
இரவு 7 மணி - பேராசிரியர் பெரியார் தாசன் வழங்கும் கலைஞருக்கு நிகர் கலைஞரே சொற்பொழிவு.
இரவு 8 மணி - கலைஞர் டி.வி. எல்லாமே சிரிப்புதான் குழுவினர் வழங்கும் சாதித்தது யாரு, சாதிக்கப் போவது யாரு நகைச்சுவை விருந்து நிகழ்ச்சி.
இரவு 9 மணி - கலைஞர்-சாதனை ஆட்சியே குறுந்தகடு வெளியீடு.
விழாவுக்கு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி தலைமை தாங்குகிறார். சட்டபேரவை துணைத் தலைவர் வி.பி. துரைசாமி வரவேற்கிறார்.
ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் தமிழரசி, மீன் வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, பால்வளத் துறை அமைச்சர் மதிவாணன், விவசாய அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எல்.பலராமன், ஜெ.அன் பழகன், சேப்பாக்கம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் விழா தொடக்க உரையாற்றுகிறார். அமைச்சர் ஆற்காடு வீராசாமி சிறப்புரையாற்றுகிறார்.












Click it and Unblock the Notifications