விபச்சாரம்- விஜயகாந்த் பட நடிகை கைது
சென்னை: வீட்டில் விபச்சாரம் செய்ததாக அரசாங்கம் படத்தில் நடித்த துணை நடிகை பிரேமா என்பவர் கைது செய்யப்பட்டார்.
விபச்சார தடுப்பு வேட்டையை சென்னை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். இதில் சமீபத்தில் சில துணை நடிகைகள் பிடிபட்டனர். உச்சகட்டமாக, கன்னடத்தில் ஹீரோயினாக நடித்துள்ள சத்யா என்பவர் காரில் விபச்சாரம் செய்ததாக பிடிபட்டார்.
இந்த நிலையில் கே.கே.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த விபச்சார வேட்டையில் துணை நடிகை பிரேமா என்கிற பிரியா பிடிபட்டுள்ளார். இவர் விஜயகாந்த்தின் அரசாங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மாறு வேடத்தில் புரோக்கர் ஒருவரை அணுகிய போலீஸார் அவரிடம் ரூ. 2500 பணத்தைக் கொடுத்தனர். பின்னர் ஒரு போலீஸ்கார் அந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்போது வீட்டில் விபச்சாரத்திற்குத் தயாராக இருந்த பிரேமாவை போலீஸார் வளைத்துப் பிடித்தனர். இவர் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications