30ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 30ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பத்தாவது வகுப்பு தேர்வுகள் முடிந்தன. 8 லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. சமீபத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்தன.
இருப்பினும் வேலூர் மையத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந் நிலையில் 30ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்தது.
அதே தினத்தில் ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் சிலபஸ் ஆகியவற்றின் முடிவுகளும் வெளியாகின்றன.
தேர்வு முடிவுகளை உங்கள் தட்ஸ்தமிழில் உடனடியாக காணலாம்.
முடிவுகளைக் காண: http://results1.oneindia.in/












Click it and Unblock the Notifications