ஆந்திரா: 14 எம்பி-8 எம்எல்ஏ தொகுதிகளில் தேர்தல்
ஹைதராபாத்: ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் உள்ள 4 நாடாளுமன்ற, 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடந்தது.
கடந்த மக்களவை-சட்டமன்றத் தேர்தல்களில் தனி தெலுங்கானா கோரி வரும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தான் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
ஆனால், தனி தெலுங்கானாவை உருவாக்குவதாக உறுதியளித்து இந்தக் கட்சியின் ஆதரவைப் பெற்று மத்தியில் ஆட்சியில் அமைந்த காங்கிரஸ் பின்னர் பல்டியடித்துவிட்டது. இதையடுத்து இக் கட்சியின் 4 எம்பிக்களும், 16 எம்எல்ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
மேலும் இரு தொகுதிகளில் ஒரு காங்கிரஸ், ஒரு தெலுங்கு தேசம் எம்எல்ஏ ஆகியோர் இறந்துவிட்டனர். இதையடுத்து அனைத்திற்கும் சேர்த்து இன்று இடைத் தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி போட்டியிடுகிறது. அந்தக் கட்சிக்கும் காங்கிரஸ், தெலுங்கு தேசம் இடையிலும் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications