தமிழகத்தில் 45 நாள் மீன் பிடி தடை நீங்கியது
கன்னியாகுமரி: தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த 45 நாட்களாக அமலில் இருந்து வந்த விசைப்படகு மீன் பிடித் தடை இன்று நள்ளிரவுடன் முடிகிறது. இதையடுத்து நாளை முதல் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கச் செல்கின்றனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனவிருந்தி காலம் என மீன்வள ஆராய்ச்சி துறையால் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மீன்களின் உற்பத்தியை பெருக்கும் வகையில் 45 நாட்களுக்கு விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி கடந்த 45 நாட்களில் மீனவர்கள் விசைபடகை சரி செய்தல், வலைகள் சரி செய்தல், புதிய வலைகள் வாங்குதல், படகு சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
இந்தத் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நாளை காலை முதல் மீனவர்கள் மீன் பிடிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
45 நாட்களாக மீன் பிடி நடைபெறவில்ைல என்பதால் தற்போது கூடுதல் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் உள்ளனர்.
அதேசமயம், கன்னியாகுமரி மீனவர்கள் ஜூன் 1 அல்லது 2ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் குளச்சல் முதல் கேரளா வரை ஜூன் 15 முதல் ஜூலை 30 வரை 45 நாட்கள் மீன் பிடிக்க தடை அமல்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications