தமிழகத்தில் 45 நாள் மீன் பிடி தடை நீங்கியது
கன்னியாகுமரி: தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த 45 நாட்களாக அமலில் இருந்து வந்த விசைப்படகு மீன் பிடித் தடை இன்று நள்ளிரவுடன் முடிகிறது. இதையடுத்து நாளை முதல் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கச் செல்கின்றனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனவிருந்தி காலம் என மீன்வள ஆராய்ச்சி துறையால் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மீன்களின் உற்பத்தியை பெருக்கும் வகையில் 45 நாட்களுக்கு விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி கடந்த 45 நாட்களில் மீனவர்கள் விசைபடகை சரி செய்தல், வலைகள் சரி செய்தல், புதிய வலைகள் வாங்குதல், படகு சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
இந்தத் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நாளை காலை முதல் மீனவர்கள் மீன் பிடிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
45 நாட்களாக மீன் பிடி நடைபெறவில்ைல என்பதால் தற்போது கூடுதல் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் உள்ளனர்.
அதேசமயம், கன்னியாகுமரி மீனவர்கள் ஜூன் 1 அல்லது 2ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் குளச்சல் முதல் கேரளா வரை ஜூன் 15 முதல் ஜூலை 30 வரை 45 நாட்கள் மீன் பிடிக்க தடை அமல்படுத்தப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications