'பொருளாதார தீவிரவாதம்'-ஜெயலலிதா பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: இந்திய பங்குச் சந்தையில் 'பார்ட்டிசிபேட்டரி' நோட்ஸ் (participatory notes) எனப்படும் முதலீடுகள் மூலம், தீவிரவாத அமைப்புகளும் பெருமளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் மூலம் நாட்டில் 'பொருளாதார தீவிரவாதம்' உருவாக்கி வருகிறது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 5வது ஆண்டு ஜெய்ப்பூர் தொடர்குண்டு வெடிப்புடனும் கர்நாடக தேர்தல் முடிவுடனும் தொடங்கியிருக்கிறது.

அதிகரித்து வரும் பண வீக்கம் மற்றும் தீவிரவாதம் ஆகிய 2 விஷயங்களும் இந்திய மக்களை வாட்டி வதைக்கிறது. பணவீக்கம் பற்றி நான் ஏற்கனவே கூறிய புகார்களுக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்னும் பதில் அளிக்கவில்லை.

இந்த இரு பிரச்சினைகளும் இணைந்து 'பொருளாதார தீவிரவாதத்தை' உருவாக்கியுள்ளது. இதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் சமாளிக்க முடியவில்லை.

2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக சபையில் கட்டிடம் தகர்க்கப்பட்ட பிறகு அங்கு புதிய தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வந்தனர். தீவிரவாதிகளுக்கு பணம் வெளிநாடுகளில் இருந்து வருவதும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதும் அங்கு ஒடுக்கப்பட்டது.

நாட்டில் முதலீடுகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. இதன் பிறகு அங்கு புதிய தீவிரவாத தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டன.

இங்கிலாந்தில் லண்டன் குண்டு வெடிப்புக்குப்பிறகு புதிய சட்டங்கள் கொண்டு வந்தார்கள். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன.

ஆனால் இந்தியாவில் தீவிரவாதம் எங்கும் எப்போதும் பரவி வருகிறது. பாராளுமனறத்தையும் கூட தீவிரவாதிகள் விட்டு வைக்கவில்லை.

இந்திய அரசு என்ன செய்கிறது?. உலக தாராளமயம் என்ற பெயரில் இந்தியாவில் தீவிரவாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் குவிகிறது.

இந்திய பொருளாதாரத்தையே இது சீர்குலைத்து விட்டது. பொடா' சட்டம் ரத்து இந்த சீரழிவுக்கு வழி வகுத்து விட்டது.

இந்தியாவில் ஒரு சாதாரண குடிமகன் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுமானால் அடையாள அட்டை, பான்' கார்ட், முகவரி சான்று போன்றவை கேட்கிறார்கள்.

ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் 'பார்ட்டிசிபேட்டரி' நோட்ஸ் (participatory notes) எனப்படும் முதலீடுகள் மூலம், தங்கள் அடையாளத்தைக் கொண்டு ஏராளமாக மறைத்து மறைமுகமாக முதலீடு செய்கிறார்கள். இதில் தீவிரவாத அமைப்புகளும் முதலீடு செய்து வருகின்றன.

இதை தடுக்க நிதித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பினாமிகள் மூலம் முதலீடுகள் செய்வதைத் தடுக்க உள்ள சட்டத்தை ஏன் பயன்படுத்தவில்லை?

வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதிகளுக்கு பணம் வருவதை சிதம்பரம் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+