அகன்றது முடியரசு-குடியரசானது நேபாளம்

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள குட்டி நாடான நேபாளம், உலகின் ஒரே இந்து நாடாக அறியப்பட்டது. மன்னராட்சி நடந்து வந்த நேபாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் போராட்டம் வெடித்தது. மாவோயிஸ்ட்டுகள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தின் விளைவாக அங்கு ஜனநாயகம் மலர்ந்தது.
ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட மாவோயிஸ்ட்டுகள் தேர்தலில் பங்கேற்றனர். ஆட்சியையும் பிடித்துள்ளனர்.
நேற்று நேபாள நாடாளுமன்றத்தின் (தேசிய அரசியல் நிர்ணய சபை) முதல் கூட்டம் நடந்தது. எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வருவதாக பிரகடனம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மன்னர் ஞானேந்திரா, அரண்மனையை விட்டு குடும்பத்துடன் வெளியேற 15 நாள் அவகாசம் கொடுத்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 560 பேரும், எதிராக 4 பேரும் வாக்களித்தனர். நேற்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 601 உறுப்பினர்களில் 565 பேர் கலந்து கொண்டனர். இன்னும் 26 நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, குடியரசாக நேபாளம் பிரகடனம் செய்யப்பட்டதை தலைநகர் காத்மாண்டுவில் பொதுமக்கள் நடனமாடியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தலைநகர் மட்டுமல்லாது நாட்டின் இதர பகுதிகளிலும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
தீர்மானத்தை பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா சார்பில் உள்துறை அமைச்சர் கிருஷ்ண பிரசாத் சிதாவுலா கொண்டு வந்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானம் மூலம் நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்துள்ளது. நேபாளத்தின் கடைசி மன்னர் பெயர் ஞானேந்திராவுக்குக் கிடைத்துள்ளது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications