ராமநாதபுரம்: சந்தேக கணவன்-தீக்குளித்த மனைவி!
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: தன் மீது கணவன் கணவன் சந்தேகப்பட்டதால் மனைவி தீக்குளித்தார்.
ராமநாதபுரம் அருகே உள்ள மங்களகுடியான் வலசை சேர்ந்தவர் செல்வேந்திரனின் மனைவி சுமதி. இவர்களுக்கு முன்று குழந்தைகள் உள்ளனர்.
மனைவி சுமதியின் நடவடிக்கையில் செல்வேந்திரன் அடிக்கடி சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் செல்வேந்திரன் மது அருந்தி வந்து மனைவியை சித்திரவதை செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த சுமதி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
பலத்த தீக்காயங்களுடன் அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து செல்வேந்திரன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications