நாய்க் கடிக்கு ஊசி போட வந்தவர் நர்ஸை கற்பழிக்க முயற்சி
Subscribe to Oneindia Tamil
கன்னிவாடி: திண்டுக்கல் அருகே நாய்க்கடிக்காக ஊசி போட அரசு மருத்துவமனைக்கு வந்தவர், அங்கிருந்த நர்ஸைக் கற்பழிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருபவர் சித்ரகலா (32).
இந் நிலையில் கன்னிவாடி அருகே உள்ள ஆலத்தூரான்பட்டியை சேர்ந்த சின்னையா (35) என்பவரை நாய் கடித்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் ஆட்டோ டிரைவர் சக்திவேலும் வந்தார்.
சின்னையாவுக்கு நர்ஸ் சித்ரகலா ஊசி போட தயாரானார். அப்போது திடீரென்று சின்னையாவும், சக்திவேலும் சேர்ந்து சித்ரகலாவின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றனர்.
சித்ரகலாவின் கூச்சல் கேட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் ஓடி வந்து சின்னையா, சக்திவேலை பிடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications