கர்நாடக சட்டமன்றம் கூடியது-6ம் தேதி வாக்கெடுப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்றுள்ள நிலையில் இன்று சட்டசபை கூடியது. 6ம் தேதி தனது பெரும்பான்மையை முதல்வர் எதியூரப்பா நிரூபிக்கவுள்ளார்.
இன்று காலை முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவே கெளடாவின் வீட்டு்க்குச் சென்ற எதியூரப்பா அவரது ஆசியைப் பெற்றார். அதே போல அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியையும் அவரது மைத்துனரின் வீட்டில் எதியூரப்பா சந்தித்துப் பேசினார்.
இன்று முதல் நாளை பிற்பகல் வரை 224 எம்எல்ஏக்களும் பதவியேற்கவுள்ளனர். நாளை பி்ற்பகல் முதல் அரசின் மீதான வாக்கெடுப்புத் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.
6ம் தேதி காலை ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் சட்டமன்ற- சட்டமேலவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து அரசின் மீது வாக்கெடுப்பு நடக்கிறது.












Click it and Unblock the Notifications