60 வயது முதியவரை திருமணம் செய்ய நிர்பந்தம்- வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண் !
Subscribe to Oneindia Tamil
கரூர்: 60 வயது தாத்தாவை திருமணம் செய்யுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால் 16 வயது இளம் பெண் வீட்டை விட்டு தப்பியோடிவிட்டார்.
கரூரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பழனியப்பனின் மகள் இந்துமதி (16). இவருக்கும் அவர்களது நெருங்கிய உறவினரானவருமான 60 வயது பெரியவருக்கும் திருமணம் செய்ய வீட்டினர் முடிவு செய்தனர்.
இதை இந்துமதி ஏற்க மறுத்தார். ஆனால், வீட்டினர் தீவிரமாக வற்புறுத்தியதால் நேற்று நள்ளிரவு வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
இதையடுத்து போலீசில் புகார் தரப்பட்டது. இந் நிலையில் இந்துமதி கோவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போக இடமில்லாமல் தெருக்களில் சுற்றி திரிந்த இந்துமதியை போலீசார் மீட்டுள்னர்.
அவர் பெண் போலீசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications