நெல்லை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். படிப்புக்கு அனுமதி
நெல்லை: நெல்லை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். படிப்பை தொடர இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
நெல்லை மருத்துவ கல்லூரியில் நோயாளிக்களுக்கான சிறப்பு வசதிகள், ஆய்வகங்கள், புதிய மருத்துவ கட்டிடங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்திய மருத்துவ கவுன்சில் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் படிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டது. தற்போது இந்திய மருத்துவ கவுன்சில் இம்மருத்துவக் கல்லூரியில், எம்.எஸ் (பொது அறுவை சிகிச்சை) பட்ட மேற்படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எம்.எஸ் பட்டப்படிப்பானது நெல்லை மருத்துவ கல்லூரியில் கடந்த 1980ம் ஆண்டு முதலே தற்காலிக படிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பை முடிப்பவர்கள் தமிழகத்திற்கு வெளியே சென்று எம்.சி.ஹெச் உள்ளிட்ட மேற்படிப்புகளை படிக்க முடியாத நிலை காணப்பட்டது. தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளதால் மேல்படிப்பு படிக்க இயலும்.
தற்போது எம்.எஸ் பட்ட மேற்படிப்பில் 4 இடங்கள் உள்ளன. வரும் கல்வியாண்டு முதல் இது கூடுதலாக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
எம்.எஸ் படிப்புக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் குறித்து சமூக சமத்துவ டாக்டர்கள் சங்க செயலாளர் துரை கூறுகையில், நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட மருத்துவ துறையினரின் 28 ஆண்டுகால கனவு தற்போது நனவாகியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications