காய்தே மில்லத் பிறந்த நாள்-தலைவர்கள் அஞ்சலி
சென்னை: காய்தே மில்லத்தின் 113 வது பிறந்த தினம் இன்று (5ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், இந்திய யூனியன் முஸ்லீம் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி, பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம், எஸ்.ஏ. சையத் சத்தார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர்ப் போர்வை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
திருநெல்வேலியில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் கண்ணியத்துக்குரிய காய்தே மில்லத். கல்லூரிக் கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு சமுதாயப் பணியிலும், தேசப் பணியிலும் ஈடுபடுத்திக் கொண்டவர்.
அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு உரையாற்றியபோது இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கே உண்டு என்று முழங்கியவர்.
கேரள மாநிலம் மஞ்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாமல் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் ஆதரவோடு அமோக வெற்றி பெற்ற பெருமையும் அவருக்கு உண்டு.
பெரியார், அண்ணா, முதல்வர் கருணாநிதி ஆகியோருடன் மிக நெருங்கிய நட்பு பாராட்டியவர் காய்தே மில்லத்.












Click it and Unblock the Notifications