துபாயில் 78 வேலைக்கார பெண்கள் கைது
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் வீடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்ட 78 பெண்கள், தங்களை வரவழைத்தவர்களின் வீடுகளை விட்டு விட்டு, வேறு இடங்களில் வேலை செய்ததால் கைது செய்யப்பட்டனர்.
இதில் பலர் இந்தியர்கள் ஆவர். இவர்களுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பின் இவர்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
கைதான பெண்களில் இந்தியர்கள், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அடக்கம். இவர்களில் பெரும்பாலானோர் ஜூமைரா பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், தங்களை ஸ்பான்சர் செய்து வரவழைத்தவர்களின் வீடுகளில் இருந்து தலைமறைவாகி வேறு இடங்களில் வேலை செய்ததால் ஸ்பான்சர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications