For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெயேந்திரர் வரவில்லை: சங்கரராமன் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கு ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 19 பேர் ஆஜராகவில்லை.
விஜேயந்திரரின் தம்பி ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
இதையடுத்து ஜூலை 14ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
Comments
Story first published: Saturday, June 7, 2008, 10:27 [IST]