ஜூலை 2 முதல் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அமைப்பின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் அதன் தலைவர் சரன்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், டீசல் மீதான வரியை ரத்து செய்ய வேன்டும். சுங்க வரியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மத்திய அரசிடம் மனு கொடுக்கவுள்ளோம்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் தருகிறோம். அதற்குள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் ஜூலை 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார் சரன்சிங்.
லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஏற்கனவே கடுமையாக உயர்ந்து இருக்கும் விலைவாசியும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையும் மிகவும் மோசமாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications